போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்த வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதி வழங்க மாட்டேன் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று அறிவித்து விட்டதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் உள்ள நீதிபதிகள், கல்வி, மதிநுட்பம், ஆற்றல், அனுபவம் ஆகியவற்றில் உலகின் வேறெந்த நீதிபதிகளையும் விட இரண்டாம் தரமானவர்கள் அல்ல. அவர்கள் எந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்களையும் கையாளக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
நாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளின்படி எந்தவொரு வழக்கிலும் வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது.
அவ்வாறு நாம், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதானால் நாட்டின் சட்டங்களையும் அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.
எனவே ஸ்ரீலங்கா தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் சேவையைப் பெற வேண்டிய அவசியம் இல்லை.
பொலன்னறுவ பகுதியில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment